Tuesday, January 22, 2013

உணவே மருந்து - சிவப்பு தக்காளி சூப்





உடல் எடையை குறைக்க சிறந்தது தக்காளி, உடலில் உள்ள அதிகமான கலோரியின் அளவை கரைத்த விடுவதோடு, உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது.  தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு.  வாரத்திறுகு இரண்டு முதல் 6 முறை தக்காளி எடுத்துக் கொள்பவர்களுக்கு மனச்சோர்விலிருந்து விடுதலை கிடைப்பதாக இவர்களின் கிளினிக்கல் பதிவுகளே கூறுகின்றனர்.
முட்டைக்கோஸ், காரட்கள், வெங்காயம் ஆகிய பிற காய்கறிகளினால் உளவியல் ரீதியான மேலோட்ட உபாதைகள் குறையும் என்று கூற முடியாது.
தக்காளியில் உள்ள லைகோபீன் என்ற சத்தே அதற்கு அந்த சிகப்பு நிறத்தை அளிக்கிறது. இதுவே சுரப்பி புற்றுநோய் மற்றும் மாரடைப்பு நோய்களை திறம்பட தடுக்கிறது என்று ஆய்வுகள் எடுத்துக் கூறியுள்ளன.

தற்போது இந்த ஆய்வில் மன ஆரோக்கியத்தையும் தக்காளி காப்பதாக கூறப்ப்ட்டுள்ளது. தக்காளியினால் சில உடல் நலன்கள் ஏற்படுவதாக இந்த ஆய்வு முடிவுக்கு வந்துள்ளது. சிவப்பு நிற தக்காளியால் செய்யப்படும் சூப் புற்றுநோய்க்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் தக்காளியில் லைகோபைன் மற்றும் காரோட்டீனாய்டு என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் அது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.

No comments:

Post a Comment